காட்சிப்பிழை:

ஊரெங்கும் வெப்பத்தாக்கம்.
மண் வறட்டியாகி மழை வரட்டும் எனவிருக்க
எப்பக்கமும் சொட்டுத்தூறல் இல்லை.

அதோ ! அங்கே மட்டும் நீர்த்தேக்கம்.
புதையல் கண்ட முதல் மாந்தன் நாந்தான்.
மற்றவர் தூங்கித்தான் போனரோ இதைக்காணாது.

பல ஆண்டுகட்கு பிறகு நீரை நேர்க்காணலே.
மெதுவாக நகர்ந்து சென்றால் நீர்க்கானலே…

Leave a comment